http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E36GP-Hvr-U
திரைப்படம் : மௌனகுரு இசை: தமன் வரிகள் : நா.முத்துகுமார் பாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரஞ்சித்,ரீட்டா, ரம்யா
என்ன இது இது என்ன தொல்லை என் மனசு என்னிடமும் இல்லை மௌனம் வந்து விழுங்குது சொல்லை ஏனோ காலிரண்டும் உடன் வரவில்லை புன்னகையும் புரிந்திடவில்லை கண்ணிமைகள் உறங்கிடவில்லை ஏனோ ஏனோ உந்தன் தனிமையின் உலகினில் முதன்முறை ஒருமுகம் அடிக்கடி அடிக்கடி வருதோ உந்தன் தலையணை உறைகளில் கனவெனும் பூச்செடி வட்டமிட்டு பூக்களைத்தருதா உந்தன் நடையுடை பாவனை சிந்தனை யாவிலும் புதுப்புது மாற்றங்கள் வருதா ஒரு செல்லமான கள்ளத்தனம் கண்ணுக்குள்ளே வந்து நின்று விட்டுவிட்டு வேதனைகள் தருதா இது ஏனோ இது ஏனோ என்னயிதுவோ என்னயிதுவோ என்னவென்று அய்யோ தெரியாதா கண்ணை மூடி உன்னை நீயே உற்றுப்பார்த்தால் உள்ளம் சொல்லாதா என்ன இதுவோ என்ன இதுவோ என்னவென்று அய்யோ தெரியாதா ஒன்றும் ஒன்றும் ஒன்று சேர்ந்து ஒன்றாகும் உண்மைப் புரியாதா ஏனோ ஏனோஎன்ன இது இது என்ன தொல்லை
நேரம் வரும் வரை என் மனதுக்குள் நூறு தீ அலை இது எதனாலோ அய்யோ பார்வை ஒரு முறை நீ பார்த்ததும் சாரல் பலமுறை எதனாலோ நீ ஒருமுறை பார்த்தால் இருதயம் உறையும் இது என்ன இது ஏனோ அய்யோ நீ மறுமுறை பார்த்தால் இருதயம் இது என்ன இது ஏனோ ஒன்றாக தொலைந்தோமோ என்ன இதுவோ என்ன இதுவோ என்னவென்று அய்யோ தெரியாதா விரும்பிவந்து மாட்டிக்கொண்ட மந்திரத்தை உள்ளம் சொல்லாதா என்ன இதுவோ என்ன இதுவோ என்னவென்று அய்யோ தெரியாதா திரும்ப திரும்ப மாட்டிக்கொள்ளும் தந்திரத்தால் உள்ளம் துள்ளாதா ஏனோ ஏனோ
என்ன இது இது என்ன தொல்லை – மெளனகுரு
ஜனவரி 7, 2014 இல் 6:32 பிப (சினிமா பாடல் வரிகள்)
Tags: அருள்நிதி பாடல்கள், தமன் பாடல்கள்
பின்னூட்டமொன்றை இடுக