படம்: மாலினி 22 பாளையங்கோட்டை
இசை: அரவிந்த் சங்கர்
வரிகள்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், நித்யா மேனன்
கண்ணீர் துளியே கண்ணீர் துளியே
கண்மணி இவளின் கண்ணம் தீண்டாதே
இவள் கண்கள் அழுதால் நெஞ்சம் உருகி
அய்யோ இந்த கல்லும் கரைகிறதே
என் தோளில்
நீ சாய்ந்து
அன்பே வா
கண்மூடு
உயிரே… உயிரே..
உன் கண்ணில் இமையாய்
காலம் முழுதும் காவல் நானிருப்பேன்
கண்ணீர் துளியே கண்ணீர் துளியே
கண்மணி இவளின் கண்ணம் தீண்டாதே
நெஞ்சே நெஞ்சே
என் சோகங்கள் அறிவாயா நீ
என் வழிதோறும் நிழல்களாக வருவாயா நீ
நதி மேல் ஒரு இலை விழுவதால்
நதிபோகும் நீரோட்டம் தடுமாறுமா
விதியோடு இந்த நதி நீந்துதே
உன் நெஞ்சம் நான் சேரும் கடல் ஆகுமா
வருங்காலம் சரியான விடை கூறுமா
உயிரே… உயிரே…
என் கண்ணில் இமையாய்
காலம் முழுதும் காவல் இருப்பாயா
இங்கு வழியில்லா
ஒரு வாழ்க்கை எங்குள்ளது
அடி உயிர் தொட்ட
கல் தானே சிலை ஆகுது
நம் பார்வையில் ஒளி வீசிடும்
விளக்கிற்கும் கீழே ஒரு இருள் உள்ளது
நெஞ்சே நெஞ்சே துன்பபடு
துன்பம் தான் நாம் வாழ வழி சொல்வது
என் கண்ணீரை துடைக்கின்ற விரல் வந்தது
உயிரே… உயிரே…
என் கண்ணில் இமையாய்
காலம் முழுதும் காவல் இருப்பாயா
கண்ணீர் துளியே கண்ணீர் துளியே
கண்மணி இவளின் கண்ணம் தீண்டாதே
இவள் கண்கள் அழுதால் நெஞ்சம் உருகி
அய்யோ இந்த கல்லும் கரைகிறதே
என் தோளில் நீ சாய்ந்து
அன்பே வா கண்மூடு
உயிரே… உயிரே….
உன் கண்ணில் இமையாய்
காலம் முழுதும் காவல் நானிருப்பேன்
பின்னூட்டமொன்றை இடுக