தேவையான பொருட்கள்:
- சேப்பங்கிழங்கு – அரை கிலோ
- மிளகாய்ப்பொடி – 2 தேக்கரண்டி
- கரைத்த புளி – 2 தேக்கரண்டி
- கடலை மாவு – 2 தேக்கரண்டி
- அரிசி மாவு – 2 தேக்கரண்டி
- ரிபைஃண்ட் எண்ணெய் – அரை லிட்டர்
செய்முறை:-
- தண்ணீரைக் கொதிக்கவைத்து சேப்பங்கிழங்குகளை நன்கு கழுவி சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- அரைவேக்காடாக இருக்க வேண்டும்.
- ஆறியவுடன் தோல் உரித்து வட்டவட்டமாக நறுக்க வேண்டும்.
- மிளகாய்பொடி, உப்பு, புளித்தண்ணீர், கடலை மாவு, அரிசி மாவு இவை அனைத்தையும் கிழங்குத் துண்டுகளுடன் கலந்து 15 நிமிடங்கள் ஊறவிட்டு, எண்ணெயை சூடாக்கி சிவக்கப் பொரிக்கவும்.
- மொறுமொறுவென்று சூப்பர் சுவையாக இருக்கும்.
ராஜேஸ்வரிரவிகுமார் , திருவையாறு
தினமணி
