
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 1கப்
சாதம் – 2கப்
வெங்காயம் – 1/2கப்
தக்காளி – 1/2கப்
கடுகு – சிறிதளவு
மஞ்சள் பொடி – சிறிதளவு
சோம்பு பொடி – 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி – 1ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
இரும்பு சட்டியில் ரிபைண்ட் எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி கடுகைப் போட்டு தாளிக்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்க்கவும்.
பின்னர், மெலிதாக நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காயை போட்டு வதக்கவும்.
கடை சியாக, மஞ்சள் பொடி, சோம்பு பொடி, மிளகாய் பொடி, சிறிதளவு உப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்.
இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த கலவையை தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.
நன்றி தினமணி! ![]()
