இட்லி மற்றும் தோசை – 2 in 1

இட்லி எல்லோருக்கும் செய்ய தெரியும். ஆனால் இந்த முறையில் எளிதாக செய்வேன். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள் :-

இட்லி அரிசி – கால்படி உலக்கு (2) அறைக்கா படி உலக்கு (2)

உளுந்து – வீசம்படி உலக்கு (2)

துவரம் பருப்பு – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

    • முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்கு கழுவி ஊறவிடவும். வேற பாத்திரத்தில் உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை கழுவி ஊற விடவும். குறைந்தது 1 மணி நேரமாவது ஊறினால் எளிதில் அரைக்கும்.
    • க்ரைண்டரில் உளுந்து போட்டு தேவையான தண்ணீர் விட்டு 1/2மணி நேரம் அரைக்கவும். பின்பு அதனுடன் அரிசியையும் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
    • நன்கு அரைத்ததும் க்ரைண்டர் ஓடும் போதே உப்பையும் சேர்த்து 5 நிமிடம் ஒட விடவும். (கையை பிசைவதற்கு பதிலாக)
    • பின்பு க்ரைண்டரை அமத்தி அரைத்த மாவை பாத்திரத்தில் கொட்டி வைத்து மூடி வைக்கவும். குறைந்தது 7மணி நேரம் இருந்தால் தான் இட்லி நன்றாக இருக்கும்.
    • அப்புறம் என்ன காலையில் இட்லி குக்கரில் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து தேவையான சட்னியை செய்து சாப்பிடுங்கள்.
    • தோசை வேண்டுமா இட்லி மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி தோசைக்கல்லில் தோசை ஊற்றுங்கள். அவ்வளவு மிருதுவாகவும் மொறுமொறுப்பாகவும் வரும்.

      ரவா இட்லி

      இது மிகவும் ருசியாக இருக்கும். இதனை எளிதில் செய்து விடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.இதனுடன் தேங்காய் தயிர் சட்னி அருமையாக இருக்கும்.

      தேவையான பொருள்கள்:-

      ரவை – 2கப்

      தயிர் – 2கப்

      சமையல் சோடா – சிறிதளவு

      முந்திரி – 10 நம்பர்

      இஞ்சி – சிறிதளவு பொடியாக நறுக்கியது

      கொத்தமல்லி தழை – சிறிதளவு பொடியாக நறுக்கியது

      கருவேப்பிலை – சிறிதளவு பொடியாக நறுக்கியது

      பச்சை மிளகாய் – சிறிதளவு பொடியாக நறுக்கியது

      கடுகு – 1ஸ்பூன்

      உளுந்து – 1ஸ்பூன்

      கடலைப் பருப்பு – 1ஸ்பூன்

      நெய் – தேவையான அளவு

      உப்பு – தேவையான அளவு

      செய்முறை:-

      முதலில் வாணலியில் 1ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் ரவையைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

      பின்பு நெய் விட்டு கடுகை போட்டு வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்நிறமாக வறுத்துக் கொள்ளவும்.

      அதனுடன் வறுத்த ரவையை சேர்த்து அதில் உப்பு, சமையல் சோடா, தேவையான அளவு தயிர் கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.

      இக்கலவையை 3மணி நேரம் ஊறவிடவும்.

      பிறகு இட்லித் தட்டில் ஊற்றி வேக வைத்தெடுங்கள்.

      சுவையான ரவா இட்லி தயார்.

      « பழைய வரவுகள்