மூன்றாவதாக நம் தூங்கும் அறையைப் பார்க்கலாம்;
* முதலில் நாம் தூங்கும் அறையில் தெய்வப் படங்களை வைக்கக்கூடாது. ஏனென்றால் நாம் தூங்கும் போது கால்களை தெய்வத்திற்கு நேர் வைத்தால் பாவமாகும்.
* தூங்கும் அறையில் இயற்கைக்காட்சி, திருமண புகைப்படங்கள், குழந்தை படங்களை வைக்கலாம். அதை நாம் விடியற்காலையில் பார்க்கும் போது சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
* நாம் படுக்கும் அறை சுத்தமாக இருந்தால் தான் நன்கு தூக்கமும் வரும்.
* வாசனை பொருள்கள் கடைக்களில் கிடைக்கின்றன. தினமும் இரவு அதை தூங்கும் அறையில் தெளித்தால் மணமாக இருக்கும்.
* நாம் தூங்கும் அறையில் பச்சை கலர் பெயின்ட் அடிக்கலாம். இதனால் தூக்கம் நன்றாக வரும்.
* நாம் தூங்கும் அறை காற்றோட்டமாக இருக்கவேண்டும். தூங்கும் ஒரு ஜன்னல் கதவையாவது திறந்து வைக்க வேண்டும். ஏனென்றால் நாம் இரவு சுவாசிப்பதற்கு காற்று வேண்டும்மல்லவா!
* தினமும் தூங்கி எழுந்தவுடன் படுத்த தலையணைகளையும் போர்வைகளை மடித்து ஒழுங்குப்படுத்த வேண்டும். தினமும் தூங்கும் போது தலையணை மற்றும் போர்வைகளை உதறி பின்பு பயன்படுத்தவும்.
* வாரத்திற்கு ஒரு முறை தலையணை உறைகளையும் போர்வைகளையும் துவையுங்கள். ஏனென்றால் தலையணையில் தலையிலுள்ள எண்ணெய் பசை படிந்திருக்கும், போர்வையிலும் கால்களிலுள்ள அழுக்குகளும் படிந்திருக்கும்.
* கட்டிலில் படுப்பவர்கள் அதிலுள்ள பஞ்சு மெத்தையை மாதம் ஒரு முறை வெயிலில் காய வைத்து எடுத்துவிடுங்கள். ஏனென்றால் நாளாக பஞ்சு இறுகி கட்டியாகிவிடும்.
* நாம் தூங்கும் அறையில் செடிகளை வளர்க்கவும் வைக்கவும் கூடாது. ஏனென்றால் இரவு தாவரங்கள் ஆக்சைடை உட்கொண்டு கார் பன்டை ஆக்சைடை வெளியிடுகின்றன. கார்பன்டை ஆக்சைடை நம்மால் சுவாசிக்க முடியாது; ஆக்சிஜன் தான் நம்மால் சுவாசிக்க முடியும். இதனால் செடிகளை வைக்காமல் இருப்பது நல்லது.