கிச்சன் டிப்ஸ் – 10

*ரவா தோசை செய் யும் போது அத்துடன் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்கள் கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை மொறுமொறுவென்று இருக்கும்.

*தேங்காய் சட்னி செய்யும் போது புளிக்கு பதிலாக சிறிது மாங்காய் சேர்த்து அரைத்தால் வித் தியாசமான சுவையுடன் இருக்கும். அதே போல் தேங்காய் சட் னிக்கு பச்சை மிளகாயை எண் ணெயில் வதக்கிய பின் அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

* இட்லிக்கான அரிசியுடன் சிறிது அவல் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போன்று இருக்கும்.

*கிழங்குகளை வேக வைக்கும் முன், உப்பு கலந்த நீரில் ஊறவைத்த பின் வேக வைத்தால் விரைவில் வெந்து விடும்.

* வடைக்கு அரைத்த மாவை சிறிது எடுத்து தண்ணீரில் போட்டதும், அது தண்ணீரில் மிதந்தால் மாவு பதமாக இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.

* பாகற்காயை சிறிது நேரம் உப்பு நீரில் ஊறவைத்த பின் சமைத்தால், கசப்பு சுவை குறைவாக இருக்கும். அல்லது பாகற் காயை வேக வைத்து தண்ணீரை வடித்த பின் வதக்கினாலும் கசப்பு சுவை குறைவாக இருக் கும்.

* சுண்டல் செய்வதற்காக, பட்டாணி வேக வைக்கும் போது குழைந்துவிட்டால், அதில் ஐஸ்வாட்டர் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து பின் சுண்டல் செய்தால் நன்றாக இருக் கும்.

*கொழுக் கட்டைக் கான மாவுடன் சிறிது பால் சேர்த்து பிசைந்து செய்தால் கொழுக் கட்டை விரியாமல் இருக்கும்.

*ஆம்லெட் செய்ய முட்டை கலக் கும் போது, சிறிது வெண் ணெய் அல் லது சில துளி பால் சேர்த்து கலந்து செய் தால் சுவை கூடுதலாக இருக்கும்.

*மோர் குழம்பில் சிறிது கடுகை அரைத்து விட் டால் சுவையும் மணமும் நன் றாக இருக் கும்.

அடைக்கு அரைக் கும் போது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் அடை மொறுமொறுப்பாக இருக் கும். அதேபோல், துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந் தம்பருப்பு ஆகியவற்றை சமஅளவிலும் அரிசி கொஞ்சமாகவும் போட்டு செய்தாலும் அடை மொறுமொறுப்பாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுக்கும் போது அத்துடன் சிறிது அரிசி மாவு தூவினால் பொரியல் மொறுமொறுப்பாக இருக் கும்.

*சேப் பங்கிழங் கை தோல் உரித்து பிரிட்ஜில் வைத்து சிறிதுநேரம் கழித்து சமைத்தால் கொழகொழப்பு தன்மை இல்லாமல் இருக்கும்.

*கூட்டு செய்யும் போது அதில் வேர்க்கடலையை ஒன்றிரண்டாக அரைத்து போட்டால் சுவை கூடுதலாக இருக் கும்.

*குழம்பில் உள்ள உப்பை எடுக்க தக்காளிப் பழத்தை நறுக்கி போட்டு கொதிக்க வைத்தால் உப்பு குறைந்துவிடும்.

*குருமா, கூட்டு போன்றவை செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா, கவலை வேண்டாம்? அத்துடன் சிறிது பொட்டுக்கடலை யை நைசாக அரைத்து சேர்த்தால் கெட்டியாகி விடும்.

*தயிர் பச்சடி நீர்த் துப் போய் விட் டால், அத் துடன் சிறிது வேர்க்கடலைப் பருப்பை வறுத்துப் நைசாக அரைத்து போட்டால் கெட்டியாகி விடும்.

*கடலைப் பருப்பை வறுத்து, பின் போளி செய்தால், போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

*கோதுமை அல்வா செய்யும் போது, பதம் தவறி தண்ணீர் அதிகமாகிவிட்டால், அதில் சிறிதளவு சோளமாவைச் சேர்க்க அல்வா கெட்டியாகும். சுவையும் நன்றாக இருக்கும்.

*வெங்காயத் தயிர் பச்சடி செய்யும் போது, கெட்டியான தேங்காய் பால் சிறிது சேர்க்க பச் சடி மிகவும் சுவையாக இருக்கும்.

*ஜவ்வரிசி வடகம் செய்யும் போது, தேவையான அளவு எலுமிச்சம்பழச் சாறு, ஓமம் சேர்த்து செய்ய மிகவும் சுவையாக இருக்கும்.

நன்றி தினமலர்!

கிச்சன் டிப்ஸ் – 9

*வெங்காய பக் கோடா போரடித்து விட்டதா? வெண்டைக் காயை நீளமாக வெட்டி இத்துடன் சிறிது கடலை மாவு மற்றும் உப்பு கலந்து செய்தால், வெண்டைக் காய் பக்கோடா ரெடி.

*பஜ்ஜி மாவுடன், சீரகத்தூள் சேர்த்து செய்தால், சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

* வெண்டைக்காய் வதக்கும் போது, ஒரு ஸ்பூன் மோர் ஊற்றி வதக்கினால், வழவழப்பின்றி சுவையாக இருக்கும்.

* பொங்கல் செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்து கலந்துவிட்டால், கெட்டியாகி விடும்.

* சிப்ஸ் செய்யும் போது, உருளைக்கிழங்கை சீவி அதை கடலைமாவு கலந்த தண்ணீரில் நனைத்து உலர வைத்து, பின் பொரித்தால், நன்றாக இருக்கும்.

* வடகத்திற்கு கூழ் காய்ச்சும் போது, சிறிது பால் சேர்த்து காய்ச்சினால், பொரித்தபின் வடகம் வெண்மையாக இருக்கும்.

* பலகாரங்களுக்கு பாகு காய்ச்சும் போது, பதம் வந்ததும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால், பாகு முறியாது.

* எலுமிச்சம் பழம் காய்ந்து விட்டதா, பிழிந்தால் சாறு வரவில்லையா? கவலையை விடுங்கள்… எலுமிச்சம் பழத்தை சூடான வெந்நீரில் சில நிமிடம் போட்டு வைத்திருந்து, பின் பிழிந்தால் சாறு நன்கு வரும்.

* புளித்த தோசை மாவில் சிறிது சர்க்கரை கலந்து தோசை வார்த்தால், புளிப்பு சுவை குறைவாக இருக்கும்.

* பலாப்பழத்தை ஒரு பிளாஸ்டிக் கவரினுள் வைத்து, ப்ரிஜ்ஜில் சில நிமிடங்கள் வைத்திருந்த பின் நறுக்கினால், பால் போன்ற பிசின் கையில் ஒட்டாது.

* தேங்காய் பர்பி செய்யும் போது, சிறிது கடலைமாவு சேர்த்து செய்தால், சுவை பிரமாதமாக இருக்கும்.

* பிரியாணி செய்யும் போது தேங்காய் பாலுக்கு பதிலாக, கட்டித் தயிர் விட்டு செய்தால், பிரியாணி உதிரியாக இருக்கும்.

* தேங்காய் சாதம் செய்யும் போது அத்துடன், சிறிதளவு வறுத்தரைத்த வெந்தயப் பொடி கலந்தால், சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.

* வெண்ணெயில் இருந்து நெய் உருக்கும் போது, முருங்கை இலை கிடைக்காவிட்டால், சிறிது வெந்தயம் போட்டு இறக்கினால் வாசனை பிரமாதமாக இருக்கும்.

*முட்டை வேக வைக்கும் போது, உப்பு போட்டு வேக வைத்தால், மேல் தோல் எளிதில் உரிக்க வரும்.

*குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், சிறிது அரிசியை வறுத்து நைசாக அரைத்து குழம்பில் கலந்து விட் டால், அதிகப்படியான உப்பு குறைந்துவிடும்.

*கோதுமை மாவில் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், நீண்ட நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். அதேபோல், ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் ரவை என்ற வீதத்தில் சேர்த்து செய்தால், பூரி நன்கு உப்பலாக வரும்.

*வழக்கமாக தயார் செய்யும் சப்பாத்தி மாவுடன், துருவி வேக வைத்து மசித்த காரட் மற்றும் சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவை நன்றாக இருக்கும். இது சத்து நிறைந்த உணவும் கூட.

*வெந்நீரில் சிறிது டால்டா கலந்து, கோதுமை மாவில் ஊற்றி பிசைந்து சப்பாத்தி செய்தால், மிகவும் சாப்ட்டாக இருக்கும்.

* மைக்ரோ ஓவனில் மறு சூடு செய்யும் போது, சாதம், பொரியல் போன்றவற்றின் மீது தண்ணீரை தெளித்து பின்னர் சூடு செய்தால், அவை வறண்டு போகாமல் இருக்கும்.

நன்றி தினமலர்! rolleyes.gif

« பழைய வரவுகள்