பற்றுப் போடு…​ பறக்கும் தலைவலி

Posted Image
வயது 55.​ ஏறக்குறைய முப்பது ஆண்டுகாலமாக தலைவலியால் அவதிப்படுகிறேன்.​ தலைவலி விட்டுவிட்டு வரும்.​ ஒரு பக்கமாக வலிக்கும்.​ தலையின் பின்புறம் சிலநேரங்களில் வலிக்கும்.​ பலமுறை தலைவலியைத் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளேன்.​ தலைக்குக் குளித்தாலும்,​​ குளிர்ந்த பானங்கள் குடித்தாலும்,​​ அதிக வெயில்,​​ மழைக்காலம் என அனைத்துத் தட்பவெப்பக் காலங்களிலும் தலைவலியால் அவதிப்படுகிறேன்.​ இதை எப்படிக் குணப்படுத்துவது?

தலைவலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன.​ தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளித்தவுடன் அல்லது குளிர்ந்த பானங்களைக் குடித்தவுடன் தலைவலி வருவதாக இருந்தால்,​​ அது தலையைச் சார்ந்த “தர்ப்பகம்’ எனும் கபதோஷத்தின் சீற்றத்தினால் விளைந்ததாகக் கருதலாம்.​ இந்தக் கபதோஷத்தின் தாக்கம் கூடினால்,​​ தலையில் நீர்க்கோர்வை,​​ நீர் முட்டல்,​​ கண்ணீர் கசிதல்,​​ லேசான காய்ச்சல் போன்றவை தென்படும்.​ அதற்கு ரேவல் சீனிக் கிழங்கு 100 கிராம்,வேப்பம் விதை 40 கிராம்,​​ சதகுப்பை 20 கிராம்,​​ சோம்பு 20 கிராம்,​​ கருஞ்சீரகம் 20 கிராம் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து,​​ ஒன்றாக இடித்துச் சூர்ணம் செய்து,​​ சிறு கண் சல்லடையில் சலித்துக் கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.

சுமார் 1-2 டீ ஸ்பூன் சூரணத்தைத் தண்ணீரில் குழப்பி இரும்பு அல்லது ஸ்டீல் கரண்டியிலிட்டு,​​ இளந்தீயில் சூடாக்கி,​​ பொறுக்கும் சூட்டில் நெற்றி,​​ நெற்றிப் பொட்டு முழுவதும் தோல் மூடும்படியான கனத்திற்குப் பற்றுப் போடவும்.​ ஒரு நாளைக்கு இரண்டு தடவை போடலாம்.​ மண்டை நீரை வற்ற வைத்துத் தலைவலியைக் குறைத்துவிடும்.

அதிக வெயில்,​​ ரத்த அழுத்தம் அதிகமிருத்தல்,​​ உடல் சூட்டினால் அதிகத் தலைவலி,​​ கடும்காய்ச்சலால் ஏற்படும் தலைவலி,​​ கிறுகிறுப்பினால் ஏற்படும் தலைவலி போன்றவை தனி பித்த தோஷத்தின் கெடுதியினால் ஏற்படுகிறது.​ அதற்கு நெல்லிக்காய் பச்சையாக இருந்தால் காய்களை நசுக்கிக் கொட்டைகளை நீக்கிவிட்டு மிளகாய் அரைக்காத அம்மியில் துவையல் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.​ நெல்லிக்காய் உலர்ந்த வற்றலை ​(நெல்லிமுள்ளி),​​ நெல்லிக்காய் போல அரைத்தும் பயன்படுத்தலாம்.​ சுமார் ஒரு பெரிய நெல்லிக்கனியளவு எடுத்துக்கொண்டு,​​ அரைத்த சந்தனம் நெல்லித் துவையலில் பாதியளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.​ நெற்றியிலும்,​​ உச்சந்தலையிலும் சுமார் புளியங் கொட்டை கனம் பற்றுப் போடவும்.​ பச்சைக் கற்பூரம் சுமார் 2-3 அரிசி எடை சேர்ப்பது விசேஷம்.

வாயு தோஷத்தின் தனி ஆதிக்கத்தினால் ஏற்படும் தலைவலியில்,​​ வாசனைக் கோஷ்டம் அல்லது வெண்கோஷ்டம் சுமார் கட்டைவிரல் கனத்திற்குக் கெட்டியாக ஒரு துண்டம் எடுத்து,​​ கல்லில் வைத்துச் சிறிது தண்ணீர் விட்டரைத்து எடுத்த விழுது இரண்டு மூன்று சுண்டைக்காயளவு,​​ நெற்றிப் பொட்டுப் பக்கத்தில் பற்றுப் போடவும்.​ வாயுதோஷத்தின் தனி ஆதிக்கத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி,​​ மாற்றி மாற்றி,​​ விட்டுவிட்டு ஏற்படும் தலைவலிகளுக்குச் சிறந்த கைகண்ட மருந்து.​ இதைச் சுடவைத்தும் சுட வைக்காமலும் செüகர்யம்போல் பூசலாம்.

ஆக எந்தெந்த நிலைகளில் தோஷங்களில் சீற்றத்திற்கு ஏற்ப,​​ மேலுள்ள பூச்சு மருந்துகளை உபயோகித்து நீங்கள் குணம் பெறலாம்.​ ஆயுர்வேத மருந்துகளில் தசமூலரஸôயனம்,​​ அகஸ்திய ரஸôயனம் போன்ற சிறந்த மருந்துகளில் எது உங்களுக்கு உகந்ததோ,​​ அதை ஆயுர்வேத மருத்துவரின் கூற்றுப்படி இரவில் படுக்கப் போகும் முன்பு ​ சாப்பிடவும்.

:ty: தினமணி!

நறநற பழக்கமா?-2

Posted Image

இரவுத் தூக்கத்தில் Frustration எனும் ஏமாற்றம் கொள்ளச் செய்யும் நிகழ்வுகளும், Suppressed anger எனும் ஒடுக்கப்பட்ட கோபமும், பற்களைக் கடிக்கச் செய்யலாம். இதுவும் மனதைச் சார்ந்தே இருப்பதால், ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய மஹாகல்யாணக கிருதம், பிராம்மீகிருதம் போன்றவற்றை, எது உகந்ததோ அதை ஆயுர்வேத மருத்துவரின் நல் உபதேசப்படி காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நிறைவான பலனை விரைவாகப் பெறலாம்.
சிலர் Agressivem personality எனும் வகையைச் சார்ந்தவராக இருப்பர். அதாவது பிறர் மீது ஏற்படும் வெறுப்பு, கோபம் ஆகியவற்றை அவர் முன்பே காண்பிப்பதுடன் நிற்காமல், இரவிலும் அதைத் தொடர்வதால் பற்களைக் கடிப்பார்கள். மனதைச் சாந்தப்படுத்தும் சில ஆயுர்வேத சிகிச்சைமுறைகளான சிரோவஸ்தி எனும் மூலிகைத் தைலத்தை தலையில் நிறுத்தி வைத்தல், சிரோதாரா எனும் மூலிகைத் தைலத்தை தலையில் ஊற்றுதல் போன்றவற்றைச் செய்து கொள்வது நல்லது.
Abnormal allignment of teeth எனும் பற்களின் வரிசைக் கிரமம் சீராக இல்லாமல் இருப்பதாலும் பற்களை இரவு தூக்கத்தில் கடிக்கலாம். இதை ஒரு பல் மருத்துவரால் மட்டுமே சரி செய்ய இயலும். பற்கள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் இருப்பதற்கான Night mouth guards என்னும் பல் கவசங்கள் தற்சமயம் வந்துள்ளன.
உடலில் ஏற்படும் வேறு சில உபாதைகளாலும் சிலர் பற்களைக் கடிப்பதுண்டு. உதாரணத்திற்குப் பார்க்கின்ஸன்ஸ் நோய் எனும் நரம்புகளை வலுவிழக்கச் செய்து, உடல் அங்க அசைவுகளை முடக்கும் உபாதையில் Bruxism எனும் பற்களைக் கடிக்கும் உபாதை ஏற்படுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பார்க்கின்ஸன் உபாதை நீங்குவதால், இந்த உபாதையும் நீங்கிவிடும்.
மனதைச் சார்ந்த உபாதைகளை மாற்றும் மாத்திரைகள், செயற்கையான மன அமைதிதரும் டிரான்க்விலைஸர் மருந்துகள் சாப்பிடுபவர்களிடமும் இரவில் பற்களைக் கடிக்கும் பிரச்னை சிலரிடம் ஏற்படுகிறது. இதை மிகக் கவனமுடன் சரி செய்ய வேண்டும். மானஸ்மித்ரம் எனும் ஆயுர்வேத மருந்து உதவக்கூடும்.
வயிற்றில் புழு பூச்சி இருந்தால் சிலர் பற்களை இரவில் கடிப்பார்கள். அவற்றை நீக்கும் வாயுவிடங்கம் சாப்பிட, இந்த உபாதை நீங்கிவிடும்.

படுக்கும் முன் ஆப்பிள் பழத்தைக் கடித்துச் சாப்பிடுவதுஅல்லது கேரட் ஒன்றைக் கடித்துச் சாப்பிடுவது போன்றவற்றால் முகத்தைச் சார்ந்த தசைநார்கள் இறுக்கம் தவிர்க்கப்பட்டு, அவை லேசாக ஆகிவிடுவதால், பற்களைக் கடிப்பது குறையலாம். படுக்கும் முன் வெதுவெதுப்பான வெந்நீரில் போட்டுப் பிழிந்தெடுத்தத் துணியை முகச் சதையின் மீது போட்டு உறங்குவதாலும் இப்பிரச்னையைச் சமாளிக்கலாம். படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் குளித்து, உடலைப் பிடித்துவிடச் சொல்வதும் நல்லதே.
மல்லாந்து படுத்து உறங்குவதன் மூலம் பற்களைக் கடிப்பதைக் குறைக்கலாம். வெதுவெதுப்பான அல்லது சூடான மூலிகை டீயைப் படுக்கும் முன் குடிக்கலாம். ஆனால் மதுபானம் கூடவே கூடாது. கால்சியம், மெக்னீசியம் சத்துள்ள மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட இந்த உபாதையைக் குறைக்கவும், பின் விளைவுகளைத் தவிர்க்கவும் செய்யலாம். படுக்கையில் அமர்ந்து மூச்சுப் பயிற்சியைச் சில நிமிடங்கள் செய்வதன் மூலம் தசை நார்கள் தொய்வு நீங்கி நிம்மதியான உறக்கம் பெறுவதன் வாயிலாகவும் பற்களைக் கடிப்பதைத் தவிர்க்கலாம்.

:ty: தினமணி

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers