மென்மையான சருமத்துக்கு…

மிளிரும், மென்மையான, புத்துணர்ச்சியான மற்றும் மிருதுவான என, பல்வேறு வகையான சருமங்கள் இருக்கின்றன. இத்தகைய சருமங்களை பெறுவதற்காக, ஏராளமான அழகு சாதனப் பொருட்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், நாம் சாப்பிடும் உணவின் மூலமே, சருமத்தை அழகாகவும், ஒளிரும் தன்மை உடையதாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
பொதுவாகவே, சரும ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ, பி, சி, இ, ஆன்டி ஆக்சிடன்ட்கள், சிங்க் மற்றும் செலேனியம் ஆகியவை மிகவும் அவசியம். அதிகளவு தண்ணீர் குடிப்பது மற்றும் தோலுக்கு ஈரப்பதத்தை வழங்கும் அத்தியாவசிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் முக்கியமானது. பருப்பு வகைகள், எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்கள் மற்றும் ஆளிவிதை போன்றவற்றில் இந்த அத்தியாவசிய கொழுப்புக்களான, ஒமேகா-3 கொழுப்பு சத்துக்கள் காணப்படுகின்றன. மிளிரும் சருமம் பெற விரும்புபவர்கள், காபின் போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது. இதோ ஒருவரின் சரும வகைகளுக்கு ஏற்பட சில ஆரோக்கிய டிப்ஸ்கள்…


சென்சிடிவ் சருமத்தினர்:

* உணவு முறைகளை திட்டமிட்டுக் கொள்வதோடு, ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
* பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரை நிறைந்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* சென்சிடிவ் சருமத்தினருக்கு தோலில் எரிச்சல் மற்றும் வைட்டமின் பி பற்றாக்குறையால், வறட்சி, செதில்கள் உதிர்தல் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அவர்கள் வைட்டமின் பி சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.


எண்ணெய் பசை சருமத்தினர்:

* எண்ணெய் பசை சருமத்திற்கு ஹார்மோன்களே காரணம். எனவே, இத்தகைய சருமத்தினர், ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துவது முக்கியம்.
* பழங்கள், காய்கறிகள் மற்றும் போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
* எண்ணெய் பசை சருமத்திற்கும் வைட்டமின் பி2 மற்றும் பி5 பற்றாக்குறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, இந்த வைட்டமின்கள் அதிகளவு நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* புரோக்கோளி, முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர் ஆகிய காய்கறிகள், அதிகளவு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இவை ஹார்மோன் சமநிலை ஏற்பட உதவுகிறது.
* மாசுமருவற்ற சருமம் பெற, அதிகளவு “சிங்க்’ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காளானில் அதிகளவு “சிங்க்’ சத்துக்கள் நிறைந் துள்ளன.
* பிளாஸ்டிக் கன்டெய் னர்களில் உணவுப் பொருட்களை வைத்து மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். இவற்றால், செனஸ்ட்ரோஜென் எனும் ரசாயனம் உருவாகி, அவை ஹார்மோன் மாற்றங்கள் நிகழ வழி வகுத்துவிடும்.
* உணவுப் பட்டியலில் இருந்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவை நீக்கிவிடுங்கள்.

வறண்ட சருமத்தினர்:
* சருமம் நெகிழ்வு தன்மையுடனும், ஈரப்பதத்துடனும், இருக்க உதவுவது, வைட்டமின் இ சத்து. பாதாம் பருப்பு, முட்டை, பச்சை காய்கறிகள், பருப்புகள், கோதுமை ஆகியவற்றில் வைட்டமின் இ சத்து அதிகளவு நிறைந்துள்ளது.
* சருமம் எப்போதும் இளமையுடன் வைத்திருக்க உதவும் சல்பர் நிறைந்த உணவுகளான முட்டை, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி தினமலர்! smile.gif

நீங்களும் அழகுராணிதான்

 

கோடை காலம் முடிந்து குளிர்காலம் துவங்கியதும், பெரும்பாலான பெண்கள், மாய்ச்சரைசிங் கிரீம் மற்றும் சன்ஸ்கிரீன் லோஷன் கள் போன்றவற்றை பயன்படுத்துவதை விட்டு விடுவர். ஏனென்றால், குளிர்காலத்தில், வெப்பம் குறைந்து காணப்படுவதால், சூரிய கதிர்களின் தாக்கம் இருக்காது என்ற எண்ணமே காரணம். குளிர்காலத்திலும், புறஊதாக் கதிர்களின் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, கோடை காலத்தை போலவே, குளிர்காலத்திலும், சருமத்தை தனிச்சிறப்பு கவனத்துடன் பராமரிக்க வேண்டும். அதற்காக, சில டிப்ஸ்கள்…

குளிர் காலத்திற்கு ஏற்ற கிரீம்கள்:
குளிர்காலங்களில், சருமத்திற்கு மிதமான, ஆல்கஹால் இல்லாத கிரீம்கள், ஆயின்மென்ட்கள் மற்றும் லோஷன்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
டியோடரன்ட்டுகள், அதிக ரசாயனம் கலப்பு நிறைந்த அழகு சாதனப் பொருட்கள் அல்லது ஆன்டி-பாக்டீரியல் சோப்புகள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


மாய்ச்சரைசர்கள் அவசியமா:

காலையில், மிதமான மாய்ச்சரைசிங் பேஸ் வாஷ் மூலம், முகம் கழுவலாம். குளிர் காலத்தில், நல்ல தரமான மாய்ச்சரைசர்களையே பயன்படுத்த வேண்டும்.
அப்போது தான், சருமம் வறண்டு போகாமல், பளபளப்புடன் இருக்கும்.
மாய்ச்சரைசர்கள், சருமத்தின் வெளிப்புற அடுக்கின் நீர்த்தன்மையை அதிகரித்து, வறண்டு போகாமல், சருமத்திற்கு மிருது தன்மையை அளிக்கிறது. வெளியில் செல்லும் போது, சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தலாம்.
குளிர் காலத்தில் அதிகம் வியர்க்காது. இதனால், சருமத்தை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு , பாலுடன், கடலை மாவை கலந்து, கிளென்சர்களாக பயன்படுத்தலாம்.
குளிர் காலங்களில் ஜெல் கிளென்சர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குளிர் காலங்களில், சருமத்தில் தங்கி, பொலிவிழக்க செய்யும் இறந்த செல்களை நீக்குவது மிகவும் முக்கியம்.
இதற்கு ஒரு ஸ்பூன் ரவையுடன், இரண்டு மடங்கு கொண்டைக்கடலை மாவு மற்றும் தயிர் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இதனால், இறந்த செல்கள் நீங்கி, முகம் பளபளப்புடன் திகழும்.

ஆயில் மசாஜ் அவசியம்:
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மிதமாக சூடுபடுத்திய எண்ணெயால் ஆயில் மசாஜ் செய்வது அவசியம். இது சருமத்தை மென்மையாகவும், நெகிழ்வு தன்மையுடனும் வைத்திருக்க உதவும்.
குளிர்காலத்தில், ஆயில் மசாஜ் செய்வதற்கு, ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.
கூந்தலுக்கு அதிக ரசாயனங்கள், நிறைந்த ஷாம்புகளை விட, மென்மையான கண்டிஷ்னர் மற்றும் ஷாம்புகளை பயன்படுத்துவதே நல்லது.

குளிர்காலத்தில் பொதுவாகவே, நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு குறைந்து விடுவதால், தோல் வறண்டு காணப்படும். எனவே, ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

* குளிர் காலத்தில் தோல்வறண்டு காணப்படுபவர்கள், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால், முகம் மென்மையாக இருக்கும்.
* குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பிரச்னை உதடு வெடிப்பு. தூங்க செல்வதற்கு முன், ரோஜா இதழ்களை அரைத்து அத்துடன், சிறிது வெண்ணெய் கலந்து, உதட்டில் தடவலாம். உதடு வெடித்திருக்கும் போது, லிப்ஸ்டிக் போடுவதை தவிர்க்க வேண்டும்.

நன்றி தினமலர்! smile.gif

« பழைய வரவுகள்