திண்டுக்கல் சாரதி – திரைவிமர்சனம்

Tamilwin.com

படத்தைப் பற்றி சில தகவல்கள்:

இந்த படம் மலையாளம் ‘வடக்கி நோக்கி யந்திரம்’ படத்தின் remix ஆகும்.

இதில் ஹீரோவாக கருணாஸ்,  ஹீரோயினியாக கார்த்திகா, அம்மாவாக சரண்யா.

புதிய இயக்குநர் சிவசண்முகன்! நன்றாக கதைக்கு ஏற்றாற்போல் நடிகன் நடிகைகளை தேர்ந்தெடுத்துள்ளார்!

இந்த படத்தின் பாடல்களில் சில பாடல்கள் பிரமாதம்!

கதை சுருக்கம்:

கருப்பான ஆணுக்கு சிவப்பான பெண்ணை கல்யாணம் பண்ணி வைத்தால் என்ன என்ன பிரச்சனை வரும் என்பதை நகைச்சுவையுடன் யதார்த்தமாக கூறியுள்ளார் இயக்குனர்! இந்த கதாபாத்திரம் கருணாஸ்க்கும் கார்த்திகாவும் ரொம்பவே பொறுந்தியுள்ளது.

மிகவும் கருப்பான இளைஞனான கருணாஸுக்கு பொன்னு பார்க்கிறார்கள். இவர் கருப்பாக இருப்பதால் யாரும் மணக்க முன் வரவில்லை.  கருப்பான பெண்கள் கூட கட்டிக்கொள்ள முன்வரவில்லை. கடைசியாக நம் ஹீரோயினியை பெண் கேட்டு போகிறார்கள் அம்மாவும் மகனும். அவள் ரொம்ப சிவப்பாக  இருக்கிறாள்! என்னை கட்டிக்கொள்ள மாட்டாள்! வாம்மா போகலாம் என்று சொல்லும் போது அவள் எனக்கு சம்மதம் என்று சொல்ல கருணாஸ் சந்தோஷத்தில் துள்ளுகிறார்.  இருவருக்கும் திருமணமும் முடிந்தது.  நன்றாக வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும் போது மனைவி மேல் சந்தேகம் வர அதனால் நிறைய பிரச்சனைகள் வருகிறது. இதனை எப்படி கார்த்திகா எதிர்கொள்கிறார்? கருணாஸ் மாறுவாரா! என்பது தான் கதையே!

சத்யம் – திரைவிமர்சனம்

சத்யம் – திரைவிமர்சனம்

ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் வாழ்க்கை பற்றிய படம் இது.

காவல் அதிகாரி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று விஷால் நம்மை நினைக்கவைக்கிறார்! போலீஸ் வேடத்தில் விஷால் சூப்பர்!
கதாநாயகி நயன்தாரா அப்ப அப்ப வந்து போறார்!
சில பாடல்கள் சூப்பர்!

கதை சுருக்கம்:

நேர்மையான ACP அதிகாரியாக விஷால்! பத்திரிக்கையாளர் ஆக நயன் தாரா! இருவரும் ஓரே அபர்மென்டில் வசிக்கிறார்கள். அப்புறம் என்ன காதல் தான்! இருவரும் காதலிக்கிறார்கள்! இடையில் விஷாலின் சிறுவயதில் அப்பாவை யாரோ கொலை பண்ண அவனை வெட்டுவதற்காக கையில் அருவாளை தூக்கி செல்லும் போது போலீஸ்காரர் ஆன ஒருவர் அவனை அழைத்து சட்டம் தான் தண்டிக்கனும் கடவுள் தான் கண்ணை குத்தனும் என்று சொல்லி அவனை நன்கு படித்து நேர்மையாக நடந்து அப்பாவிற்கு பெருமை சேர் என்று அறிவுரை கூறி அனுப்பிவிடுகிறார்! அவர் சொன்னதை மந்திரமாக எடுத்து நேர்மையான போலீஸ்காரர் ஆக வழம் வருகிறார். அப்போது நகரில் மந்திரி, அமைச்சர் ஆகியோரை யாரோ கொலை செய்து விடுகின்றனர். அதனை கண்டுபிடிக்க விஷாலுக்கு உத்தரவு. எப்படியோ போராடி கொண்டவனை கண்டுபிடித்து விடுகிறார். கொலையாளி வேற யாருமில்லை சிறுவயதில் அறிவுரை சொன்ன போலீஸ்காரர் தான்! உடனே விஷால் ஏன் சார் இப்படி! உங்களை பார்த்து தான் நான் போலீஸ்காரர் ஆனேன் என்று சொல்லி கோர்ட்டில் ஒப்படைக்கிறார். அந்த போலீஸ்காரரை டிமான்டில் 9நாள் சிறைதண்டனை கொடுத்தது! நான் போலீஸ் காரனா இருந்து எதையும் சாதிக்கமுடியவில்லை! அதான் இப்படி கொலைபண்ணினேன் என்று கூற விஷாலுக்கு கோபம் வந்து நான் போலீஸ்காரனாகவே இவர்களை பிடிக்கிறேன் என்று சபதம் செய்வார். ஆனால் அவரால் செய்ய முடியவில்லை! விஷாலின் அம்மாவும் இருந்துவிடுவார்! விஷாலையும் சிறையில் அடைத்துவிடுவர். பின்பு என்ன நடந்திருக்கும் விஷால் ஜெயித்தாரா அல்லது கொலையாளி ஜெயித்தாரா! smile.gif

« பழைய வரவுகள் புதிய வரவுகள் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers