கேன்சர் என்றாலே, யாருக் கும் உச்சகட்ட கவலை தான். ஆனால், அந்த புற்றுநோய்களும் இப்போது, வயதானவர்களுக்கு மட்டுமல்ல, நடுத்தர வயதினருக்கும் கூட வர ஆரம் பித்துவிட்டது. ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய், பெண் களுக்கு மார்பக புற்றுநோய் என்று பல வகைகள் இருந் தாலும், பத்தாண்டுக்கு முன் இருந்தது போன்ற நிலை இப்போது இல்லை. முறைப்படியான சிகிச்சை முறைகளை கையாண்டால், ஆயுள் நீட்டிக்கலாம் என்பது மட்டும் நிச்சயம்.
புற்றுநோய்களில் இந்தியாவில் அரிதாக இருந்த ஒரு வகை தான் “மல்டிபில் மைலோமா’ என்பது. வெள்ளை “பிளாஸ்மா’ அணுக்களை எலும்பு மஜ்ஜையில் தாக்கி, புற்றுநோய் கட்டிகளை ஏற்படுத்துவது தான் இந்த பாதிப்பு. இந்தியாவில் 35 லட்சம் பேருக்கு இப்போது உள்ளது. வியாதி வந்து 20 ஆண்டுகள் கூட எந்த பயமுமின்றி வாழ இப்போது சிகிச்சை வந்து விட்டது. இருந்தாலும் லட்சக்கணக்கில் பணம் வேண்டுமே.
நன்றி தினமலர்! ![]()