கிச்சன் டிப்ஸ் – 8

* பூண்டு, வெங்காயம் போன்றவற்றை முதல் நாளே ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தால், சுலபமாக தோல் உரிக்க வரும்.

* உணவில் காரம் அதிகமாகி விட்டதா? கவலையை விடுங்கள். அதில், சிறிது எலுமிச்சம் பழச்சாறை சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.

* பிரியாணி செய்யும் போது அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டால், சாதம் ஒன்றுடன் ஒன்று ஓட்டாமல் இருக்கும்.

* எலுமிச்சம் பழம் வாடாமல் இருக்க, தினசரி ஒரு மணி நேரம் நீரில் போட்டு எடுத்து வைக்கலாம். இப்படி செய்தால் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும்.

* வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

* கீரையின் வேர்பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால், கீரை மறுநாள் வரை வாடாமல் இருக்கும்.

* மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வெதுவெதுப் பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பித்தளை பாத்திரங்களை துலக்கினால், அவை பளிச்சிடும். அதே போல், காபி போட்ட பின், அந்த காபி தூளை காயவைத்து பாத்திரம் துலக்கினால், பாத்திரங்கள் மின்னும்.

* பட்டாணியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால், வெந்ததும் வாசனை நன்றாக இருக்கும்.

* சாம்பார் செய்யும் போது அதில் ஒரு நெல்லிக் காயை சேர்த்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

* உளுத்தம் வடை செய்யும் போது, சிறிது இட்லி மாவு சேர்த்து செய்தால், வடை எண்ணெய் குடிக்காது. சுவையும் நன்றாக இருக்கும்.

* முட்டை ஓட்டில் விரிசல் இருந்தால் வேக வைக்கும் போது, அதில் உள்ள திரவம் தண்ணீரில் கலந்து விடும். இதை தடுக்க தண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி வேக வைக்கலாம்.

* அப்பளம், வடாம் போன் றவை வைத்திருக்கும் டப்பாவில், சிறிது பெருங்காயத் தை போட்டு வைத்தால், அவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.

* மைக்ரோ ஓவனில் அரிசியால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை மீண்டும் சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், வேகமாக சூடாகும்.

* முகத்திற்கு பூசும் மஞ்சள் கிழங்கு நீண்ட நாட்கள் இருந் தால், உளுத்துப் போகிறதா? மஞ்சள் கிழங்குடன், கற்பூரத் தையும் சேர்த்து டப்பாவில் போட்டு மூடி வைத்தால் உளுத்து போகாமல் இருக்கும்.

* கலந்த சாதம் செய்ய, சாதத் தை ஆற வைக்கும் போது அதில் சிறிது நல்லெண் ணெய் ஊற்றி ஆறவைத்தால், உதிராக இருக்கும்.

* தேங்காய் சாதத்தில் சிறிதளவு வேர்கடலையை சிறிது சிறிதாக உடைத்து போட்டால், சுவை பிரமாதமாக இருக்கும்.

* மைக்ரோ ஓவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும்; இல்லையென் றால், சில வெந்தும், சில வேகாமலும் இருக்கும்.

* ரவா லட்டு செய்யும் போது சர்க்கரையுடன், சிறிது பால் பவுடர் சேர்த்து செய்தால், சுவை சூப்பராக இருக்கும்.

* தக்காளி சாதம் செய்யும் போது, தண்ணீருக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

* தேங்காய் துருவலை பால் சேர்த்து அரைத்து பர்பி செய் தால், கூடுதல் வெண்மை நிறமாக இருக்கும்.

* பக்கோடா செய்யும் போது சிறிது ரவை கலந்து செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதில் ரவைக்கு பதில் வேர்க்கடலையை பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம்.

நன்றி தினமலர்! :)

7 மறுமொழிகள்

  1. KOTHAI சொன்னது,

    ஜூன் 2, 2009 இல் 5:05 மு.பகல்

    Dear sister,

    Can U tell me What is Rambai ilai

  2. KOTHAI சொன்னது,

    ஜூன் 2, 2009 இல் 5:06 மு.பகல்

    Dear sister,

    Can U tell me what is Rambai Ilai?….

    Waiting for your reply
    reg
    kothai Jayaram

  3. தேவி சொன்னது,

    ஜூலை 2, 2009 இல் 5:33 மு.பகல்

    நீங்கள் கேட்டது புரியவில்லை தோழி கோதை! :(

  4. KOTHAI சொன்னது,

    ஜூலை 18, 2009 இல் 11:30 மு.பகல்

    Dear Sister,

    Still I have not recd the answer from your side for Rambai Ilai.
    Waiting
    Kothai Jayaram

  5. தேவி சொன்னது,

    ஜூலை 22, 2009 இல் 6:59 மு.பகல்

    ரம்பை இலை என்றால் தாழம்பூ இலை என்று அர்த்தம் கோதை! :)

  6. KOTHAI சொன்னது,

    ஜூலை 25, 2009 இல் 10:57 மு.பகல்

    Dear Devi,

    Recd your answer for my question. Noted. Thnaks a Lot. Can we use This Thalambu Ilai for Briyani. I saw in one website thys are using this ilai for Briyani. Pls conform

    reg
    kothai Jayaram

  7. தேவி சொன்னது,

    ஜூலை 25, 2009 இல் 3:49 பிற்பகல்

    எனக்கு தெரியாது கோதை! தெரிந்த பின்பு உடனே தொடர்பு கொள்கின்றேன் கோதை! :)


மறுமொழியொன்றை வழங்குக