|
மிக நுண்ணிய அணுவின் இருப்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே குறிப்பிட்டிருப்பது மட்டுமன்றி, துளைக்கவும் முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது தமிழ் நூல்களில். அணுவில் ஒரு கூறாக இருப்பவரே அண்டம் முழுவதும் வியாபித்து இருப்பதாக ஆழ்வார்களும் சைவ அருளாளர்களும் பாடியுள்ளனர்.
|
![]() |
|
அணுவை பிரித்தால் ஒலியாகவும், பொருளாகவும் பிரிந்து சக்திஞியாகும் என்பதும் அணுவுக்குள் உள்ள அசைவே ஸ்ரீநடராஜ பெருமானின் உருவஅமைப்பு தத்துவம் என்பதும் தமிழ் சைவக் கோட்பாடு. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தனது அணுசக்தி விஞ்ஞானத்தைகண்டு பிடித்த பின் திருவாச்சியுடன் கூடிய ஸ்ரீநடராஜர் உருவத்தை பார்த்ததும் ஒலியும், பொரும் அதன் சக்தியும் Doctrine of Relativity என்ற மது விஞ்ஞான முடிவுக்கு ஆதாரமாக உள்ளது என்று வியந்து விட்டார்.
அணுவை பிளக்கும் போது உண்டாகின்ற இரு பிரிவுகளுக்கு எலக்ட்ரான், புரோட்டான் என்று பெயரிட்டுள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள். அணுவை தமிழ் அருளாளர்கள் வியந்து விளக்கியுள்ளனர். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திரு அண்ட பகுதியில் முதல் நான்கு வரிகளிலேயே அண்ட தத்துவத்தை விளக்கி விடுகின்றார். பிரம்மாண்டத்தில் உள்ள எண்ணிறந்த கோளங்களின் தன்மைகளை முற்றிலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆராய்ந்தால் அவற்றின் சீரமைப்பும், அழகும், வியப்பிற்குரியது. தனியழகுடன் கோடிக்கணக்கில் உள்ள அந்த கோளங்கள்அகண்டமான பிரபஞ்சத்தில் விரிந்து போகின்றன என்கிறார். இதையே மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களும், சிந்தனையாளர்களும், அண்ட வெளியில் உள்ள நெருப்புடன் கூடிய வாயு (அக்கினி காற்று) கோளம் பல கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மாற்றத்தால் Big Bang என்ற பெரு வெடிப்புக்கு உள்ளாகி, அதன் மூலம் நட்சத்திர கூட்டங்களும், கிரகங்களும் தோன்றின. அப்போது ஏற்பட்ட பிளாக்கோல் எனும் கருந்துளைகள் தமது ஆகர்ஷண சக்தியால் எல்லா கிரகங்களையும் விழுந்து விடாமல் இழுத்து பிடித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த கருத்தை விஞ்ஞான பூர்வமாக நிரூபிப்பதற்காக செய்ற்கையானபெரு வெடிப்பு முயற்சிகள் துவங்கியுள்ளன. இதற்காக சுவிட்சர்லாந்து பிரான்ஸ் எல்லை பகுதியில் தரைக்கு அடியில் முன்னூறு மீட்டர் ஆழத்தில் ஆய்வுக்கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. .லகின்பல நாடுகளும், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், பாலஸ்தினம் என்று வேறுபட்ஐட நாடுகள் உள்பட ஒன்றுபட்டு ஒரு சில ஆண்டுகளாக திட்டமிட்டுள்ளனர். இங்கு ஹைட்ரஜன் அணுக்கள் உடைக்கப்பட்டு, புரோட்டான்கள் உருவாக்கப்படும். இவை ஒளியின் வேகமான ஏழாயிரத்து அறுநூறு கிலோ மீட்டர் வேகத்தில் இருபத்தேழு கிலோமீட்டர் நீளத்தில் நீள்வட்ட வடிவிலான உருளையில் வலம் வர செய்யப்படும். இந்த சோதனையின் போது புரோட்டான் செல்லும் பாதையின் எதிராக இன்னொரு கற்றை புரோட்டான்கள் அதிவேகத்தில் வரச்செய்யப்படும். இரு புரோட்டான்களும் அதிவேகமாக மோதும் போது அளப்பரிய சக்தி வெளிப்படும்.ஆயினும், இதன் மூலம் இருள்பொருள், எதிர் பொருள் என்ற பலவித சக்திகள் பற்றிய கண்டுபிடிப்புகளுடன் அணுக்களை இணைக்கும் சக்தி பற்றியும் கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த சோதனையினால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக பேரழிவு நேரிடும் என்றும், புரோட்டான்கள் மோதுவதால் தோன்றும் கருந்துளைகளால் இந்த பிரபஞ்சத்தின் கோள்களும் நட்சத்திரங்களும் தமது நியதியான இயக்கத்திலிருந்து பிறழ்ந்து வழி தவறி மோதிவிடவோ அல்லது பூமி நோக்கி வீழ்ந்து விடவோ ஆபத்துக்கள் உண்டு என்றும் வேறு பல விஞ்ஞானிகள் அச்சுறுத்தியுள்ளனர். மருத்துவ விஞ்ஞானத்தின் வளர்ச்சி காரணமாக மனித உயிர்களின் இருதயம், நரம்பு பாதிப்பிலிருந்து முன்னெச்சரிக்கையாக தடுக்கப்பட்டு வருவதை காண்கிறோம். அதே போல் பிரபஞ்சம், உலகம் பற்றிய விஞ்ஞான அறிவுமனித குலத்திற்கு பெரும் பயன் விளைவிக்கும் என்று நாம் நம்பலாம். 10.09.08 அன்று தொடங்கப்பட்ட இந்த சோதனையின் முதல் கட்டமானது வெற்றிக்கரமாக நிகழ்ந்தது. புரோட்ஐடகூõன்கள் ஒரே திசையில் அதிவேகத்துடன் செல்லும்படி செய்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். அடுத்த மாதம் புரோட்டான்களை எதிர் திசையில் திருப்பி விட திட்டமிட்டுள்ளனர். புரோட்டான்கள் உராய்வதால் கிடைக்கும் விளைவினால், காந்த சக்தி உறுதியும் அணு சக்தியின் எளிய நிலையும் கூடஅறிய முடியும். சுத்த சிவத்திடமிருந்து வந்த ஜடசக்தியே பஞ்ச பூதங்களாகி, அவற்றால் எண்ணிறந்த அண்டங்கள் உண்டான பின், அவையே சிவபெருமானின் அருவத்திருவுருமாகிய லிங்கம் என்ற சைவ சித்தாந்தமும்,உலகம், பிரபஞ்சம் மற்றும் யுகங்கள் பற்றிய வேதங்கள் போன்றவற்றை மேல்நாட்டு விஞ்ஞானிகள் தெரிந்திருக்க மாட்டார்கள்.ஆயினும், இவற்றில் ஈடுபாட்டுடன் நேசித்து அறிந்திருக்கும் நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் மனித குலம் உயரும் என்று வழி மொழிந்திருக்கின்றார். இறைவனின் படைப்பில்உயர்ந்ததான மனித அறிவின் மகத்தான் சாதனைகள் தொடரும் என்று பெருமிதப்பட வைக்கிறது. மெய்ஞானமும், விஞ்ஞானமும் ஒன்றிணைந்து செயல்படும் போது தான். மனிதர்களுக்குள் மன மாச்சர்யங்கள் ஒழிந்தது. மனித நேயம் மேம்படும் என்பதால் என்றும் நிலவுமே ஆனந்தம்.
நன்றி மஞ்சரி! |

